முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைஞர் என்னும் மனிதர்

சுப்பிரமணிகளும்- திருப்பதிகளும்- ராமன்களும் நிறைந்த ஒரு ஊரில் - இளம்பரிதிகளும் - சிற்றரசுகளும் - தென்னவன்களும் - குணசேகரன்களும் - முத்தமிழ்ச்செல்விகளும் -அன்புக்கரசிகளும் - நிறைந்திருப்பதற்குக் காரணம் கலைஞரும் அண்ணாவும் பெரியாரும்தான். என் தலைமுறைக்கு பெரியார் புகைப்படமாக வந்து சேர்ந்தார். அண்ணா புத்தகங்களாக வந்து சேர்ந்தார். கலைஞர் மட்டும்தான் குரலாக - எழுத்தாக - திரைப்படமாக - பதவியாக - அதிகாரமாக- வந்து சேர்ந்தார். தி.மு.க என்பதை ஒரு கட்சியாக இல்லாமல் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என எங்களுக்குள் விதைத்தவர் கலைஞர் தான்.