`கருணாநிதியின் துரையும்… அண்ணனின் ஆழ்வாரும்'' - தி.மு.க நிர்வாகிகள் சலசலப்பு கதையின் பின்னணி! அ.சையது அபுதாஹிர் துரைமுருகன் - ஜெகத்ரட்சகன் politics Subscribe to instant updates "எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து, ஒரு போராளியாக 1953-ம் ஆண்டு இந்த இயக்கத்துக்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, இரு வண்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்துக்காக கோஷமிட்டபடியே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்...’’ துரைமுருகன் - பொருளாளர், தி.மு.க ''ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வின் முகமாகப் பார்க்கப்பட்டுவரும் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற விரக்தியில் கட்சி மாறப்போகிறார் என்று வெளியான செய்திதான் அவரை இந்த அளவுக்குச் சீற்றமடையச் செய்துவிட்டது. பொதுச் செயலாளர் பதவியும், துரைமுருகனைச் சுற்றிய சர்ச்சையும் கட்சிக்குள் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கின்றன. துரைமுருகனும...