தனியாருக்கு முறைகேடாக விதை விற்பனை: லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய வேளாண் உதவி இயக்குநர்! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 23,42,150 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள் வேளாண்மைத்துறையில் பணியாற்றும் அலுவலர்களில் பெரும்பாலானோர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால், விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள், பலன்கள், கிடைக்காமல் போய்விடுகிறது. அதிகளவில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தாண்டவமாடக்கூடிய துறையாக இது திகழ்கிறது. ஆனாலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இவர்கள் பெரும்பாலும் சிக்குவதே இல்லை. இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தி, 23,42,150 ரூபாய் பணத்தை கைப்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் ...